பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221


பொல்லாத உலகத்திலே நல்லதுக்குக் காலமில்லே!
போலியெல்லாம் போடுதண்ணே கொண்டாட்டம்-இந்தப்
போக்கு மாற செலுத்த வேணும் கண்ணோட்டம்!
கள்ளர்களும் கயவர்களும்
கண்ணியவான் போர்வையிலே
கொள்ளையிட்டுப் பணத்தைச் சேத்துக் குவிப்பதா?
நல்ல மனம் உள்ளவங்க
சில்லறைகள் பார்வையிலே
நாணய மில்லாதவராய்த் தவிப்பதா?
(பொல்லாத)


வெள்ளைசள்ளையிருந்தாத்தான் மதிப்பதா?-அது
இல்லையின்னா காலில் போட்டு மிதிப்பதா?-இனி
இந்தநிலை மாறிடவே இன்ப நிலை நேர்ந்திடவே
ஒன்றுபட்டு உறுதியோடு உழைக்கணும்!
(பொல்லாத)


உள்ளபடி வயிறெரியும்.
உதடு மட்டும் பழம் சொரியும்
தில்லு முல்லு திருகு தாளக் கூட்டமே
பல்லைக் காட்டிக்கிட்டு
பாடிகார்டா சுத்திக் கிட்டு
குல்லாப் போட்டு செய்யுது ஆர்ப்பாட்டமே
(பொல்லாத)