பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232


ஜரிகைப் பட்டு சலசலக்க
சாந்துப் பொட்டு பளபளக்க
புருஷன் மனசு கிறுகிறுக்க
புதுக் குடித்தனம் நடத்தப் போற
கல்யாணப் பொண்ணே!
கல்யாணப் பொண்ணே!
கவனம் வையடி!


வரவுக் கேத்த செலவு பண்ணும்
வழி மொறையைத் தெரிஞ்சுக்கோ!
மாமன் மாமி நாத்தி மனம்
கோணாமலே நடந்துக்க
புருஷன் குணம் போற போக்கு
நடத்தைகளைப் புரிஞ்சுக்க!
புத்தியோடு நடந்து நல்ல
பேரும் புகழும் தேடிக்க!
(கல்)
அரச்சு மஞ்சளைக் கொழச்சு முகத்தின்
அழகு வளரப் பூசிக்க!
சிரிச்ச முகம் சீதேவியா
இனிக்க இனிக்கப் பேசிக்க!
அசட்டையாக இல்லாமலே
அலுவல்களைப் பார்த்துக்க!
அடக்க ஒடுக்கம் அன்பையும் உன்
அருந் துணையா சேத்துக்க!
(கல் )