பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

235


நான் சொல்லும் ரகசியம்
கண் காணும் அதிசயம்
நன்றாக எண்ணிப் பாருங்க
இதை அவசியம்-அவசியம்-அவசியம்
(நான்)


உணவுக்கு ஒரு கும்பல்
போராடும் வேளையில்
பதவிக்கு ஒரு கும்பல்
போராட்டம் நடத்துது!
ஒய்வில்லா வேலையால்
உசுரை விடும் ஏழையின்
உழைப்பாலே ஒரு கும்பல்
உல்லாசம் தேடுது!
(நான்)


கல்யாணம் செய்யவே
சிங்காரப் பந்தலும்
கச்சேரி சதுராட்டம்
ஊர்வலமும் வேணுமா?-இவை
இல்லாமல் எவரேனும்
கல்யாணம் பண்ணினால்
இன்பசுகம் பிள்ளை குட்டி
இல்லாமல் போகுமா!
(நான்)