பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

243


புதிய வாழ்வு பெறுவோம்!-மதியினால்
விதியை வெல்ல முயல்வோம்!
கெதியை நொந்திடாமல்-காலக்
கெதியை நொந்திடாமல்
கடமையைச் செய்வோம்!
(புதிய)
உழவைப் போற்றி வளர்ப்போம்!-சகல
உயிர்க்கும் உணவு அளிப்போம்!
பஞ்சப் பிணியைத் தொலைப்போம்!-சமதர்மப்
பாதை தன்னை வகுப்போம்!
(புதிய)
எழுத்தறிவில்லார் என்பவரே-இங்கே
எவருமில்லாமல் செய்திடுவோம்!
பகுத்தறிவாளர் பாசறையாய்ப்
பாரில் நம் நாட்டை ஆக்கிடுவோம்!
(புதிய)
இந்த நாட்டின் எதிர்காலம்
இளைஞர்கள் கையில் இருப்பதாலே-அவர்களை
வளர்க்கும் மாதர் அறிவே வளர்ந்திடும்
மார்க்கம் காணச் செய்வோம்!
(புதிய)
அமரகவி-1952
இசை : G. ராமநாதன்
பாடியவர்: M.K. தியாகராஜபாகவதர்