இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
255
- அன்பினாலே உண்டாகும் இன்பநிலை! அதை
- அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை! (அன்)
- சொந்தமென்னும் உறவுமுறை நூலினாலே!-அருட்
- சோதியான இறைவன் செய்த பின்னல் வேலை! (அன்)
- தன்னை மறந்தாடும் சிலையே!
- சங்கத் தமிழ் பாடும் கலையே!
- சிலையே கலையால் நிலையே
- குலைந்தாய் உண்மையிலே!
- உளமிரண்டும் நாடி
- உறவே கொண்டாடி
- கனிந்து முதிர்ந்த காதல் தனை
- நினைந்து மனம் உருகிடுது வாழ்வினிலே! (அன்)
- கொஞ்சு மொழிக் குழந்தைகளைப் பிரிந்த போது! நல்ல
- குலவிளக்காம் மனைவிதன்னை இழந்தபோது!
- தம்பி தன்னைப் பறிகொடுக்க நேர்ந்த போது!
- சம்சாரம் எல்லாம் அழிந்த போது வாழ்வில் ஏது!
(அன்)
பாசவலை–1956
- இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர்: C. S. ஜெயராமன்