பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

261


தொகையறா

தூங்கையிலே வாங்குகிறமூச்சு-இது
சுழிமாறிப் போனாலும் போச்சு!-உளுத்த
மூங்கில் உடல் மேல்மினுக்குப் பூக்சு!-என்ற
மொழி என்றும் உண்மையான பேச்சு!

(பாட்டு)

இன்பமெங்கே? இன்பமெங்கே? என்றுதேடு!-அது
எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு!
இன்றிருப்போர் நாளையிங்கே
இருப்பதென்ன உண்மை!-இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்துக்
காத்து என்ன நன்மை?
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை!
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை? (இன்ப)
கனிரசமாம் மதுவருந்திக்
களிப்பதல்ல இன்பம்!
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம்!
இணையில்லா மனையாளின்
வாய்மொழியே இன்பம்!-அவள்
இதழ் சிந்தும் புன்னகையே
அளவில்லாத இன்பம்!  (இன்ப):