பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264


மனித னெல்லாம் தெரிந்து கொண்டான்!
வாழும் வகை புரிந்து கொண்டான்!
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்றுமட்டும் புரியவில்லை -
மனிதனாக வாழமட்டும், மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
இனிய குரலில் குயில் போலே
இசையும் அழகாய்ப் பாடுகிறான்!
எருதுகள் போலே வண்டிகளை
இழுத்துக்கொண்டு ஓடுகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
மனிதனாகவாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
சாரமில்லா வாழ்க்கையிலே
சக்கரம் போலே சுழலுகிறான்!
ஈரமண்ணால் பல உருவை
இறைவனைப் போலே படைக்கின்றான்!
நேரும் வளைவு நெளிவுகளை
நீக்கி ஒழுங்கு படுத்துகிறான்
மனிதனாக வாழமட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)