இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
264
- மனித னெல்லாம் தெரிந்து கொண்டான்!
- வாழும் வகை புரிந்து கொண்டான்!
- இருந்த போதும் மனிதனுக்கு
- ஒன்றுமட்டும் புரியவில்லை -
- மனிதனாக வாழமட்டும், மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
- இனிய குரலில் குயில் போலே
- இசையும் அழகாய்ப் பாடுகிறான்!
- எருதுகள் போலே வண்டிகளை
- இழுத்துக்கொண்டு ஓடுகின்றான்
- வனத்தில் வாழும் பறவைகள் போல்
- வானில் பறந்து திரிகின்றான்
- மனிதனாகவாழ மட்டும்
- மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)
- சாரமில்லா வாழ்க்கையிலே
- சக்கரம் போலே சுழலுகிறான்!
- ஈரமண்ணால் பல உருவை
- இறைவனைப் போலே படைக்கின்றான்!
- நேரும் வளைவு நெளிவுகளை
- நீக்கி ஒழுங்கு படுத்துகிறான்
- மனிதனாக வாழமட்டும்
- மனிதனுக்குத் தெரியவில்லை
(மனிதனெல்லாம்)