இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
269
- பெண்ணெனும் மாயப்பேயாம்-பொய்மாதரை
- என் மனம் நாடுவேனோ-அழகினால் உலகமே அழியும்
- மின் விழிப்பார்வை நோயால்-மெய்யறிவு
- தன் நிலை மாறுவேனோ?
- கன்னியர் காமத்தீயாம்-பொய்க்கானலில்
- வெந்துடல் வாடுவேனோ?
- புன் மொழி மாதை நானே-எண்ணியே
- பொய் வழி சேருவேனோ?
- பெண்களைப் பேணுவார்தாம்-பின்னாளிலே
- விண்ணினைக் காணுவாரோ?
- உண்பதோ காயை வீணே!-இங்கெவரும்
- உண்ணுவார் தீங்கனியே!
- அண்ணலைப் பாடுவேனே-மெய்ப்பேரின்ப
- நன்னிலை நாடுவேனே!
- சம்புவின் நாமமதே பணிந்திட
- பந்தமதே நீங்குமே!
- மாயாவதி-1949
இசை : G. ராமநாதன்
பாடியவர்: T. R. மகாலிங்கம்