இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
273
- நீயும் நானும் ஒன்று-ஒரு
- நிலையில் பார்த்தால் இன்று! (நீயும்)
- அழகை உனக்கு கொடுத்த இறைவன்
- அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்!
- விழியை எனக்கு கொடுத்த இறைவன்
- வழியை காட்ட மறுத்து விட்டான்! (நீயும்)
- எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
- என்பதுனக்கும் தெரிய வில்லை!
- எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
- என்ப தெனக்கும் புரியவில்லை! (நீயும்)
- உறவுமில்லை பகையுமில்லை
- உயர்வும் தாழ்வும் உனக்கில்லை!
- இரவுமில்லை பகலுமில்லை
- எதுவும் உலகில் எனக்கில்லை! (நீயும்)
கொடுத்து வைத்தவள்-1963
பாடியவர் : P. சுசிலா
இசை : K. V. மகாதேவன்