இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
274
- யாருக்குத் தீங்கு செய்தேன்?
- யார் குடியைக் கெடுத்தேன்?
- யார் பொருளை அபகரித்தேன்?
- சீரோடு வாழ்ந்த என்னை
- வேரோடு அழித்தது ஏன்?
- தெய்வமே! இது நீதியா?
- கண்ணில்லையோ? மனமில்லையோ?
- கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ?
- கருணைக் கடல் என்பதெல்லாம் பொய்யோ?
- கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ? (கண்)
- எண்ணமும் கனவாகி இடி மின்னல் மழையாகி
- கண்களும் கண்ணீர் கடலானதே!
- மங்கல வாழ்வும் பறிபோனதே!
- துயர் சூழ்ந்த என் வாழ்வில் புயல் வீசலாமோ?
- உயிரோடு எனை வைத்து வதைசெய்யலாமோ?(கண்)
- என்னைப் படைத்ததும் ஏன்?
- இன்பங் கொடுத்ததும் ஏன்?
- இது போலே பாதியிலே தட்டிப் பறித்ததும் ஏன்?
- அன்பை வளர்த்ததும் ஏன்?
- ஆசையைத் தந்ததும் ஏன்?
- துன்ப மெனும் நெருப்பாற்றில்
- எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்? (கண்)