பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280


இறந்த கால வாழ்வை எண்ணி ஏங்காதே!
எதிர்கால இன்ப வாழ்வை உதறித்தள்ளாதே-மனமே.
(இறந்த)


பறந்து போகும் வானம்பாடி ஜோடி பார்!-அவை
பாடும் இனிய காதல்கீதம் தன்னைக்கேள்!-மனமே
(இறந்த)


அறுந்து போன பின்னும் அந்த யாழிலே!-புதிய
நரம்பை மாட்டி நாதம் சேர்ப்பதில்லையா?
சரிந்து போன வீட்டை இந்த உலகிலே-புயலால்
சரிந்து போன வீட்டை இந்த உலகிலே-மீண்டும்
பழுது பார்த்துக் குடியிருப்பதில்லையா?- மனமே
(இறந்த)


பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே-மண்ணில்
பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே!-இதை
மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே!
நிறைந்த துன்பம் நீங்கி வாழ்வில் இன்பமே!
சிறந்து வாழும் வழியைத் தேட வேணுமே!-மனமே
(இறந்த)


ஆசை அண்ணா அருமைத்தம்பி-1955


இசை: K. V. மகாதேவன்