பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

281


உம்.... சாவு....சாவு....
சஞ்சலம் தீர்க்கும் மருந்து-அது
சாந்தியும் நிம்மதியும் தரும் விருந்து!
பஞ்சம் பசிப்பிணியால் தவிப்பவர்க்கு-இனி
அஞ்சேல் என அபயம் அளிக்கும்!
நெஞ்சத் துயர் சுமையால் துடிப்பவர்க்கு-அது
நீங்காத அமைதியைக் கொடுக்கும். (சஞ்சலம்)


சாவின் மடியில் தான் கவலையில்லை- செத்தும்
சாகாமல் வாழும் இந்த நிலமையில்லை!
வாழ்வுமில்லை-சாவில் தாழ்வுமில்லை!
நானுமில்லை-அங்கே நீயுமில்லை-! (சஞ்சலம்)


அழுக்கு.......அழுக்கு......
உள்ளே அழுக்கிருக்க
வெளியழுக்கை விலக்க
நினைப்பது ஏன் மட நெஞ்சமே-உற்று
நினைத்துப் பார் நீ இதைக் கொஞ்சமே!
குள்ள நரித்தனக் கள்ளம் கபடங்கள்
உள்ளத்தில் ஒரு கோடியுண்டு-அதை
வெள்ளைத்துணியாலும் வெல்லம் போல்சொல்லாலும்
மூடி மறைப்பவர்கள் உண்டு-அந்த
மனிதர் அழுக்கை எண்ணிப்பாரு-அதை
அகற்ற நல்லவழி கூறு! -


மருத-17