இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
281
- உம்.... சாவு....சாவு....
- சஞ்சலம் தீர்க்கும் மருந்து-அது
- சாந்தியும் நிம்மதியும் தரும் விருந்து!
- பஞ்சம் பசிப்பிணியால் தவிப்பவர்க்கு-இனி
- அஞ்சேல் என அபயம் அளிக்கும்!
- நெஞ்சத் துயர் சுமையால் துடிப்பவர்க்கு-அது
- நீங்காத அமைதியைக் கொடுக்கும். (சஞ்சலம்)
- சாவின் மடியில் தான் கவலையில்லை- செத்தும்
- சாகாமல் வாழும் இந்த நிலமையில்லை!
- வாழ்வுமில்லை-சாவில் தாழ்வுமில்லை!
- நானுமில்லை-அங்கே நீயுமில்லை-! (சஞ்சலம்)
- அழுக்கு.......அழுக்கு......
- உள்ளே அழுக்கிருக்க
- வெளியழுக்கை விலக்க
- நினைப்பது ஏன் மட நெஞ்சமே-உற்று
- நினைத்துப் பார் நீ இதைக் கொஞ்சமே!
- குள்ள நரித்தனக் கள்ளம் கபடங்கள்
- உள்ளத்தில் ஒரு கோடியுண்டு-அதை
- வெள்ளைத்துணியாலும் வெல்லம் போல்சொல்லாலும்
- மூடி மறைப்பவர்கள் உண்டு-அந்த
- மனிதர் அழுக்கை எண்ணிப்பாரு-அதை
- அகற்ற நல்லவழி கூறு! -
மருத-17