பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

297


ஆண் : சீனத்து ரவிக்கை மேலே
சேலம் பட்டு சரிகைச் சேலே!
ஓரங் கிளிஞ்ச தென்னடி?-எங்குருவிக்காரி
உண்மையைச் சொல்லிப் போடடி!


பெண்: பானையை எறக்க நானும்
பரணை மேலே ஏறும் போது
ஆணி மாட்டிக் கிழிஞ்சி போச்சுடா!-எங்குருவிக்காரா
அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா!


ஆண் : மாலை வெயில் டாலடிக்கும்
மாம்பழக்கன்ன நிறம்
மாறிச் சிவந்த தென்னடி?-எங்குருவிக்காரி
மர்மம் விளங்கச் சொல்லடி!


பெண்:மாலையிட்ட மம்முதனே!
காலையிலே உன்னுடைய
வாண்டுப் பயல் கடிச்சிப் போட்டாண்டா!-எங்குருவிக்காரா
தாண்டியே குதிக்க வேணாண்டா!


ஆண் : சீவி சிணுக்கெடுத்து
சிங்காரிச்சு பூவும் வச்சு
கோயிலுக்குத் தானே போனே?-எங்குருவிக்காரி
கூந்தல் கலைஞ்சதென்னடி?


மருத-18