பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!... ஏ... ஏ...
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!...ஆ...ஆ...
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!

பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே-பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே!-நாம்
க்ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே-இந்த
தேச மெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே!....(ஏர்)

நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக-அது
நெல் மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக-அடிச்சு
பதரு நீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக! (ஏர்)

வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா?-தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா-இது
வளர்த்து விட்ட தாய்க்குத்தரும் ஆசை முத்தமா?என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீ என் சொத்தம்மா! (ஏர்).

                        
பிள்ளைக் கனியமுது-1958


இசை:K. V. மகாதேவன்
பாடியவர்:T. M. செளந்தரராஜன்