பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


                                                (தொகையறா)
நாம் பொறந்த சீமையிலே
பூமி செழிப்பாச்சி-முப்
போகம் வெளஞ் சாச்சு-இல்லையென்ற பேச்சே
இல்லாமல் போச்சு-இனி எந்நாளும் நமக்கு
                                                திரு நாளுமாச்சு?

இனி
பஞ்சப் பாட்டு பாடாமெ
கஞ்சிக்காக வாடாமெ
நஞ்செ புஞ்செ நல்ல ராசி தந்தது-பலன்
நம்ம வீடு தேடியோடி வந்தது!

காலை முதல் மாலை வரை கஷ்டப்பாடு பட்ட நாங்க
கனவு கண்ட தான்ய லெட்சுமி தாயே-எங்க
கவலை தீர வந்த தேவி நீயே!

பொங்கல் விழா கொண்டாட
செங்கரும்பும் வாழைத் தாரும்
மஞ்ச கொத்தும் இஞ்சி கொத்தும் பூவும்-நாம
சந்தையிலே வாங்கி வரப் போவோம்!

பிள்ளைகளின் வாயினிக்க
வெண் பொங்கல் பால் பழம்
பெரியோருக் கெல்லாம் தரவேணும் தாம்பூலம்!