பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


ஆண்: தக்தினதீன் தினதீன் தக்தினதீன்!
பெண்:பசி தீருமா?
ஆண்: தக்தினதீன்!
பெண்: நிலைமாறுமா?
பஞ்சத்தினாலே படும் சஞ்சலம்தானே
பறந்தோடுமா
காலம் ரொம்பக் கெட்டுப்போச்சு ரேஷனுமாச்சு!
ரேஷனுமாச்சு!
கல்லோடு மண்ணை நாம் சாப்பிடலாச்சு!
நாம் சாப்பிடலாச்சு!
காறிப்போன சோளம் வாங்கும் காலமும் ஆச்சு!
காலமும் ஆச்சு
பசி தீருமா?
ஆண்: தக்தினதீன்!
பெண்: ஹா...
பசி தீருமே!
பாடுபட்டா லேபஞ்சப்பேயும் தன்னாலே பறந்
தோடுமே!
ஏர்பிடித்தே சேவை செய்தால் ஏது பஞ்சமே?
ஏதுபஞ்சமே !
எந்தநாடும் உணவுக்காக நம்மைக் கெஞ்சுமே!
நம்மைக் கெஞ்சுமே!
பெண்: கந்தல் ஆடைகட்டி வாழும் காலம் மாறுமா?
காலம் மாறுமா?
கள்ளச்சந்தைக்காரர் செய்யும் தொல்லை தீருமா!
தொல்லை தீருமா?
துயர் தீருமா?