பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


ஆடுறமாட்டை ஆடிக்கறக்கனும்!
பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்!
அறிவும் திறமையும் வேணும்!-எதுக்கும்
அறிவும் திறமையும் வேணும்!  (ஆ)

காடுமேடாகத் தரிசாகக் கிடந்த மண்ணு! நெற்
களஞ்சியமானது எப்படியென்று எண்ணு!-அது
பாடுபடும் விவசாயிகள் திறமையினாலே!
பலனுண்டு நாமிதை உணர்ந்து நடப்பதனாலே!

மண்ணோடு மண்ணாக மங்கிக்கிடக்கிற பொன்னு!
மங்கையர் அணியும் நகைகளாவதை எண்ணு!-அது
மின்னுவதெல்லாம் தொழிலாளி திறமையினாலே!-புது
மெருகு கிடைப்பது கையாளும் முறைகளினாலே! (ஆ)

மண்ணையும் பொன்னையும் போன்றவளேதான்
பெண்ணும்!-அவள்
மனசையறிந்தாலே வசப்படுத்தலாம் ஆணும்!-இதை
எண்ணிப்பாராமல் பேசுவதால் பலன் இல்லை!
-பெண்ணிடம்
இருக்கும் குறைகளை மாற்றுவது ஆண்களின் வேலை!

அறிவாளி-1963

இசை  : S.V. வெங்கட்ராமன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்