பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


       விண்ணில் நான் இருக்கும் போது!
       மண்ணில் ஒரு சந்திரன் ஏது?
       அம்மா என்ன புதுமை என்றே
       கேட்கும் அந்த மதியைப் பாரு!

       இன்ப வாழ்வின் பிம்பம் நீயே!
       இணையில்லா செல்வம் நீயே!
       பொங்கும் அன்பின் ஜோதி நீயே!
       புகழ் மேவி வாழ்வாய் நீயே!
       புகழ் மேவி வாழ்வாய் நீயே!
       புகழ் மேவி வாழ்வாய் நீயே!


மங்கையர் திலகம்-1955


இசை  : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர் : பாலசரஸ்வதி