பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலே!

ஐக்கியமாகி விடும் இது உண்மை ஜெகத்திலே

மழைபோல் கருணையுள்ள மனமிருந்தாலே
வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே
மாற்றாந்தாய் என்பதையே மறந்திடும் பிள்ளை
மலர்முகம் காட்டிவந்து அமர்ந்திடும் மடியிலே!
(குழந்)

பெற்றால்தான் பிள்ளையென்பதில்லையே! அதற்கு
சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே!
வற்றாத அன்பு என்னும் அமுதையே!-யார்
வழங்கினலும் மயங்கும் தெய்வம் குழந்தையே!
(குழந்)

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா