பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


பெண் : முத்துப்போலே மஞ்சள் கொத்துப் போலே
முழுநிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஒய்ந்தது
கண்மணியுன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது

ஆண்: தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
உனைப் பெற்ற அன்னை பெருமை கொள்ளும்
நிலையைத் தந்தது-(முத்து)

பெண்: கட்டித் தங்கமே என்னாசைக் கனவு யாவுமே

ஆண்:கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே

பெண் : கண்ணைக் காக்கும் இமையைப் போல்-உன்னை
வாழ்விலே
இருவரும்: கால மெல்லாம் காத்திருந்து மகிழுவோமடா!
(முத்து)

சபாஷ் மாப்பிளே-1961

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா