பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சின்ன அரும்பு மலரும்-அது
சிரிப்பைச் சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்-நான்
களிக்கும் நாள் வரும்
(சின்ன)
மண்ணில் உலவும் நிலவே-என்
வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே-மனம்
மகிழும் நாள் வரும்-நான்
மகிழும் நாள் வரும்
(சின்ன)
உனது மாமன் வருவார்
அணைத்து இன்பம் பெறுவார்
உரிமை எல்லாம் தருவார்-அந்த
அரிய நாள் வரும்-சுகம்
பெருகும் நாள் வரும்
(சின்ன)
ஏழை கண்ட தனமே-மனம்
இளகச் செய்யும் அழகே
வாழைக் குருத்துப் போலவே-நீ
வளரும் நாள் வரும்-குலம்
தழைக்கும் நாள் வரும்
(சின்ன)