பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


தாயாக்கி வச்ச என் தங்கமே!
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே!-என்னை
(தாயாக்கி)

வாயும் வயிறுமாய் இருக்காமே!-ஒரு
மருத்துவச்சி வந்து பார்க்காமே!
மாவடுவை வாங்கிக் கடிக்காமே-என்னை
மற்றாெருத்தி தாங்கிப் பிடிக்காமே!-பெத்த
(தாயாக்கி)

நான் பூஜை புனஸ்காரம் பண்ணாமே
ஒரு புண்ணியச் செயலையும் செய்யாமே
பேசும் தெய்வம் ஒண்ணு வந்ததடி!-கூடப்
பிறக்காத தங்கையாய்ப் போற்றுதடி
(தாயாக்கி)

என் தெய்வத்தைத் தெய்வமாய்க் கொண்டவளே!
பெரும் செல்வத்தின் செல்வத்தைக் கண்டவளே!
கொய்யாத கனியாக இருந்தவளே!-என்
குழந்தைக்குக் குழந்தையாய் வந்தவளே!
(தாயாக்கி)

அழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம்! உனக்கு
ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்!
அழகுமுகம் இது மாறிடலாம்! உன்
அன்பு மனம் மாறக் கூடாது!

ரெளடி ராக்கம்மா -1977

இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்