பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80


பெண்: எந்நாளும் அழியாத நிலையிலே-காதல்
ஒன்றே தான் வாழும் இந்த உலகிலே!

ஆண் : கண்முன்னே தோன்றும் அந்தக் கனவிலே! உள்ளம்
கலந்திடுதே ஆனந்த உணர்விலே!

பெண்: கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்!
இனிமை தருவதுண்மைக் காதலே!

ஆண் : காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்!

பாவை விளக்கு-1960

இசை : K. V. மகாதேவன் -
பாடியவர்கள்: C. S. ஜெயராமன் P. சுசிலா