பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83



ஆண் : கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து
மின்னொளியே ஏன் மெளனம்?
வேறெதிலே உந்தன் கவனம்?

பெண் : இன்மொழி பேசி ஏய்த்திட எண்ணும்
இதய மில்லாதார் கவனம்!
இழந்ததனால் இந்த மெளனம்!

ஆண் : வண்ணச் சிலையே! வளர்பிறையே!
வந்த தறியேன் மனக் குறையேன்?

பெண் : எண்ணம் வேம்பு! மொழி கரும்பு!
எனைப் பிரிந்த உம் மனம் இரும்பு!

ஆண் : கண்ணே போதும் சொல்லம்பு!
உனைக் கணமும் பிரியேன் எனை நம்பு!

பெண் : உண்மையில் என் மேல் உமக்கன்பு!
உண்டென்றால் இல்லை இனி வம்பு!

ஆண் : கண்ணில் தவழுதே குறும்பு!
கனி மொழியே நீ எனை விரும்பு!

இருவரும் : கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து
கனிவுறும் காதல் ஜோதி!
காண் போமே பாதி பாதி!

தூக்கு தூக்கி-1954

இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன், M. S. ராஜேஸ்வரி