பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86


அலிபாபா : மாசிலா உண்மைக் காதலே?
மாறுமோ செல்வம் வந்த போதிலே!

மார்ஜியானா : பேசும் வார்த்தை உண்மை தானா?
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?

அலிபாபா : கண்ணிலே மின்னும் காதலே!
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே?
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே!

மார்ஜியானா : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?
                                            (பேசும்)

அலிபாபா : உனது ரூபமே உள்ளந் தன்னில் வாழுதே!

மார்ஜியானா : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே!

இருவரும் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்!
இங்கு நாம் இன்பவாழ்வின் எல்லை காணுவோம்!
                                                (மாசிலா)

அலிபாபாவும் 40 திருடர்களும்-1955

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்கள்: A. M. ராஜா P. பானுமதி