பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88



நீங்க மட்டும் எங்க நெஞ்சைத் தாக்கலாமா? - உள்ள
நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா?

பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்தவுடன் காதலிச்சு - அவளைக்
கைவிட்டு ஒன்பது மேல் ஆசை வச்சு
வண்டாக மாறுகின்ற மனமுள்ள ஆம்பளைங்க
கொண்டாட்டம் போடுவதைப் பார்த்ததில்லையா? -பெண்கள்
திண்டாடும் கதைகளையே கேட்டதில்லையா?

ஆண் : ஒண்ணெ விட்டு ஒண்ணெத் தேடி ஒடுறவன்!
ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்!
உள்ள இந்த உலகத்தையே
உற்றுப் பார்த்தா நீங்க இப்போ
சொல்லுவது எல்லாமே உண்மைதான்!-கொஞ்சம்
தூரநின்னு பழகுவதும் நன்மைதான்! நன்மைதான்!
ஆமா! ஆமா! ஆமா!

பெண் : கட்டுப்பாட்டை மீறாமெ
சட்ட திட்டம் மாறாமெ
காத்திருக்க வேணும் கொஞ்சகாலம் வரை!
கல்யாணம் ஆகிவிட்டால் ஏது தடை?

குமுதம்-1961

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & ஜமுனராணி