பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93


ஆண் : ஆடாத மனமும் உண்டோ? நடை
அலங்காரமும் அழகு சிங்காரமும்-கண்டு  (ஆடாத)

பெண் : நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்-வீர
நடைபோடும் திருமேனி தரும் போதையில் (ஆடாத)

ஆண் : வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்-கை
வளை ஓசை தரும் இன்ப இசைக் கார்வையில்

பெண் : ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்-தனி
இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில் (ஆடாத)

ஆண் : இதழ் கொஞ்சும் கனிஅமுதை மிஞ்சும்
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே!

பெண் : பசுந்தங்கம் உனது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே! (ஆடாத)

ஆண் : முல்லைப் பூவில் ஆடும் சிறுவண்டாகவே!

பெண் : முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே

ஆண் : அன்பை நாடி உந்தன் அருகில் வந்து நின்றே

பெண் : இன்ப மெனும் பொருளை இங்கு கண்டே

ஆண் : தன்னை மறந்து

பெண் : உள்ளம் கனிந்து

இருவரும் : இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
(ஆடாத)