இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
VI
விதையுங்கன் - ஆனால் கொடுங்கோலனை அறுக்க விடாதீர்கள்,
ஆக்குங்கள் - ஆனால் அயலானே ஆள விடாதீர்கள்!
ஆயுதம் செய்யுங்கள் - ஆனால் நீங்களே உபயோகியுங்கள்!
VII
குகையிலும் குடிசையிலும் ஒதுங்குகிறீர்கள்!
நீங்கள் அலங்கரித்த மாளிகையில் அயலான் வசிக்கிறான்!
நீங்கள் செய்த விலங்கை நீங்களே அணிவதேன்?
நீங்கள் வடித்த வேல் உங்களையே நோக்கி வருவதேன்?
VIII
ஆம், உங்கள் மண்வெட்டி கொண்டு
உங்கள் சவக் குழியையும் அமைத்துக் கொள்க
ஆம், உங்கள் தறியைக் கொண்டு
உங்கள் சவமூடு துணியும் நெய்து கொள்க;
ஆங்கில நாடு உங்களுக்கு இடுகாடு வழங்கும்,
கவலை வேண்டாம்!
84