பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆஸ்கர் ஒயில்ட்

தேவ நீதி மன்றம்

தேவநீதி மன்றம். மனிதன் கடவுள் சன்னிதானம் வந்தபொழுது நிசப்தம். கடவுள் மனிதனுடைய ஜீவிய ஏட்டைத் திறந்தார்.

‘உன் வாழ்வு தீமை நிறைந்ததாகும். உதவி வேண்டியவர்க்குத் துக்கம் தந்தாய். ஏழைகள் இரந்த பொழுது செவிசாய்க்கவில்லை. அனாதைகள் ஐச்வரியத்தை அபகரித்தாய். நல்லோர் உணவைப் பறித்து நாய்களுக்கு இட்டாய்!,’ என்று கடவுள் கூறினர்.

‘ஆம், அவ்விதமே நடந்தேன்’ என்று மனிதன் மறுமொழி கூறினான்.

மறுபடியும் கடவுள் மனிதனுடைய ஜீவிய ஏட்டைத் திறந்தார்.

86