உன் குரல் காற்றில் கலங்க கானாமுதம் போல இருப்பதற்காக அன்று; உன் விஜயம் கீழ்த் திசையில் காணும் அருணோதயம் போல இருப்பதற்காகவும் அன்று;
நீ பாட்டோடும் நடனத்தோடும் வருகிறாய் என்பதற்காக அன்று, உன் பாதங்கள் வசந்த மாருதம் போல் மின்னுவதற்காகவும் அன்று;
உன்னிடம் உதிக்கும் நறுமணத்திற்காகவும் அன்று;
உன் வாசஸ்தலம் வீரர்கள் பெருமாட்டிகள் நடுவே என்பதற்காக அன்று;
சலவைக் கல் முற்றத்தில் செய்-சுனைகளின் இசை கேட்டு நிற்கிறாய் என்பதற்காக அன்று;
சாந்த எண்ணங்களும் தவறில்லாத பேச்சுக்களும் உன் தோழமையா யிருப்பதற்காக அன்று;
விசாலமான மாளிகைகளில் மலர்களிலும் மதுக் கலசங்களிலும் நீ தங்கியுள்ளாய் என்பதற்காக அன்று;
மரணத்தைக் கண்டு நீ அஞ்சுகிறாய் என்பதற்காகவும் அன்று, நீ சிறுகுழந்தையாயிருக்கிருய் என்பதற்காகவும் அன்று.
ஆனால், நீ பூமியினின்று எழுந்து, அரக்கன் போல் வானுற வளர்ந்து எனக்குப் பயங்கரமாய்த் தோன்றுவதால்;
நீ பூமியில் இருளையும் - மின்னலையும் நிறைத்து என்னிடம் வரும் பொழுது நான்
93