இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
III
மகள் கூப்பிடத் தந்தை வருகிறார்,
ஆம் தாயும் வாசலுக்கு வருகிறாள்.
விரைந்து வருகிறாள் - மனத்தில் கலக்கம் -
நடையில் பதற்றம் - குழலில் குலைவு !
IV
"கடிதமா? சீக்கிரம் திற - சீக்கிரம் திற !
ஒகோ, இது நம் மகன் எழுதியதா ?
ஆனால் கையொப்பம் அவனுடையதே !
ஒகோ, அவனுக்காக யாரோ எழுதியுளர் ! '
V
ஐயோ, அல்லலுறும் அன்னையின் ஆன்மாவே!
அவள் கண்முன் அனைத்தும் சுழல்கின்றன !
முக்கிய மொழிகளே காதில் பாய்கின்றன.
வாசகம் முழுதும் கேட்க ஆற்றாள்.
'குதிரைப் படைச் சண்டை -
குண்டுக் காயம் மார்பில் -
வைத்திய சாலையில் - அசெளக்கியம் -
ஆனல் குணம் விரைவில் ! '-
தாயின் முகம் வெளுத்துவிட்டது ;
தலையில் மயக்கம், கதவோடு சாய்கிறாள்.
2