இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
VI
அம்மா ! அங்ஙனம் அயராதே !'-
அழுதுகொண்டே மகள் கூவுகிறாள்.
சிறு குழந்தைகள் மெளனங் கொண்டு
மதிமயங்கிச் சூழ்ந்து நின்றன.
'அம்மா ! இதோ பார் !
பீட்டர் விரைவில் குணமடைவான்
என்று கடிதம் கூறுவதைக் கேள் !’
VII
ஐயோ, ஒருநாளும் அவன் குணமடையான் !
வாசற்படியில் வருந்தி நிற்கும் பொழுதே
அவன் வைத்தியசாலையில் இறந்துவிட்டான்!
ஒரே மகன் - உயிர் துறந்துவிட்டான் !
VIII
ஆனால் இனி அன்னை குணமடைய வேணுமே !
பகலில் உணவு தொடுவதில்லை,
இரவில் தூங்குவதில்லை,
அல்லும் பகலும் அழுவாள், ஏங்குவாள் !
'இறைவா ! எவரும் அறியா வண்ணம்
வாழ்வி னின்றும் வெளியேறி
என் அருமை மகனைத் தேடி
அவனோடு இருக்க அருள்வாய் !'
என்று கடவுளை இறைஞ்சி உருகுவாள்.
3