பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன் போல் என்பால் இருக்க ஆசை,

என் குழந்தாய் !


IV

குழந்தாய் ! என் குழந்தாய் !

அவரைக் கண்டு ஆனந்திப்பாய்,

என் குழந்தாய் !

அச்சம் அறியாத கண்கள்

அவரையே நாடச் செய்யும் !

அன்பு ததும்பும் பார்வை,

நிறைந்த குரல் - தெளிந்த நகை,

இவற்றால் நீ அறிந்து கொள்வாய்,

என் குழந்தாய் !


குழந்தாய் ! என் குழந்தாய் !

அளவிலா ஆனந்தம் - உறங்க முடியவில்லை,

என் குழந்தாய் !

எவ்வளவு இன்பம் - அழுது விடுவேன் !

உன்னைப் பார்க்க - என்னை நோக்கிக்

கடலில் வந்துகொண்டிருக்கிறார்,

என் குழந்தாய் !


சார்லஸ் மாக்கே