இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன் போல் என்பால் இருக்க ஆசை,
என் குழந்தாய் !
IV
குழந்தாய் ! என் குழந்தாய் !
அவரைக் கண்டு ஆனந்திப்பாய்,
என் குழந்தாய் !
அச்சம் அறியாத கண்கள்
அவரையே நாடச் செய்யும் !
அன்பு ததும்பும் பார்வை,
நிறைந்த குரல் - தெளிந்த நகை,
இவற்றால் நீ அறிந்து கொள்வாய்,
என் குழந்தாய் !
குழந்தாய் ! என் குழந்தாய் !
அளவிலா ஆனந்தம் - உறங்க முடியவில்லை,
என் குழந்தாய் !
எவ்வளவு இன்பம் - அழுது விடுவேன் !
உன்னைப் பார்க்க - என்னை நோக்கிக்
கடலில் வந்துகொண்டிருக்கிறார்,
என் குழந்தாய் !
சார்லஸ் மாக்கே