இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குழந்தை மகாராஜா
I
குழந்தை மகாராஜா
அரியாசனத் தமர்ந்து,
தனிக் குடைக் கீழ்
அரசு செய்கிறார் !
II
அவர் அரியாசனம் எது?
அன்னையின் மெல்லிய மடி.
அவர் தவிர யாரும்
அதில் அமர முடியாது.
III
அவர் அரசு எது ?
அன்னையின் இதய கமலம்.
அது முழுதும் அவருக்கே சொந்தம்,
அங்கே அரச பக்தி ததும்பும்.
IV
அவர் சட்டங்கள் அனைத்தும்
தெய்விக மானவை,
அவ்வளவு சுலப மானவை,
அன்பு மய மானவை.
லாரன்ஸ் ஆல்மா டாடிமா
9