இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
IV
குழந்தைகள் மட்டும் இல்லாவிடில்,
உலகத்தால் நமக்கு என்ன பயன் ?
முன்னுள்ள இருளினும் பின்னுள்ள பாலையை
அதிகமாக அஞ்சுவோம்.
V
இனிய மென் சாறு,
ஒளியும் காற்றும் பருகி
மரமாய் இறுகும்.
அடி மரத்துக்குக் கிடையாத
ஒளியும் காற்றும்
இலைகளால் கிடைக்கும்.
அரனியத்துக்கு இலைகள் - அவைபோல்
அவனிக்குக் குழந்தைகள் !
VI
குழந்தைகளே ! என்னிடம் வாருங்கள் !
உங்கள் ஒளியுலகில் உலவும்
பட்சியும் காற்றும் பாடுவதை
என் செவியில் கூறுங்கள் !
VII
உங்கள் மெய் தீண்டும் இன்பம்,
உங்கள் பார்வையின் ஆனந்தம்,
இவை எங்கே ?
19