பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குழந்தைகள் காண்பது என்ன ?

I

நாம் சிறு குழந்தைகள் தான் !

ஆனால் குழங்தைகளா யிருப்பதில்,

எத்தனை கோடி யின்பம் !

பெரியவர்கள் காணவே முடியாத

ஆயிர விசித்திரம் காண்போம் !

II

அதோ ஒரு பாறை .

அதன் மேல் பாசி -

அவற்றைப் பெரியோர் பார்ப்பதுண்டோ ?

அவர்கள் புல்லில் படுத்து

விளையாடுவ துண்டோ ?

III

கடற்கரைக்குப் போனால்,

நம் அப்பாவுந்தான் வருகிறார் .

ஆனால், நம்மைப் போல் அவர்

விசித்திரப் பொருள்கள் காண்பதுண்டோ?

லாரன்ஸ் ஆல்மா டாடிமா

14