இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குழந்தைகள் காண்பது என்ன ?
I
நாம் சிறு குழந்தைகள் தான் !
ஆனால் குழங்தைகளா யிருப்பதில்,
எத்தனை கோடி யின்பம் !
பெரியவர்கள் காணவே முடியாத
ஆயிர விசித்திரம் காண்போம் !
II
அதோ ஒரு பாறை .
அதன் மேல் பாசி -
அவற்றைப் பெரியோர் பார்ப்பதுண்டோ ?
அவர்கள் புல்லில் படுத்து
விளையாடுவ துண்டோ ?
III
கடற்கரைக்குப் போனால்,
நம் அப்பாவுந்தான் வருகிறார் .
ஆனால், நம்மைப் போல் அவர்
விசித்திரப் பொருள்கள் காண்பதுண்டோ?
லாரன்ஸ் ஆல்மா டாடிமா
14