பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை



IV

என் கால்-பந்து இப்பொழுது அலமாரியில் :

இப்பொழுது நானேதான் பந்து ;

உலகம் இங்கு மங்கும் உதைக்கும் !

அம்பு எய்வேனோ ? அதையும் மறந்தேன்.

என் அம்பையும் வில்லையும் எல்லாம்,

துக்கம் என்மீதே திருப்பிவிடும் !

v

வானத்தில் அன்று கண்ட நீலமும்

சாந்தியும் 'இன்று உண்டோ ?

விளையாடும் பூமியில் வளர்ந்த மரம் -

அதைப் போர்த்த இலைகள் -

அந்தப் பசுமை இப்பொழுது உண்டோ ?

நான் நேசித்தவை எல்லாம் மாறிவிட்டன .

அப்படியில்லை, மாறுதல் என்னிடம்தான்:

இனி என் மனம் சாந்தி அடையுமோ ?


ஹூட்