பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







ராபர்ட் பர்ன்ஸ்


காதல்

அழகான டூன் நதி தீரமே !

சூழ்ந்து செறிந்த சோலைகளே !

நானோ கவலை நிரம்பி யுள்ளேன்,

நீங்கள் அழகாய் மலர்கின்றீர்!

சின்னப் பறவைகளே! அழகாய்ப் பாடுகின்றீர்!

உங்களுக்கு எப்படி மனம் வந்ததோ ?

II

கிளையில் உட்கார்ந்து பாடும் எழில் பறவையே!

என் இதயத்தை ஏன் வதைக்கிறாய் ?

என் பொய்க் 'காதல்' மெய்யாய் இருந்ததே !

அந்தக் காலத்தின் ஆனந்தத்தை

இப்பொழுது நினைப்பூட்டுகிறாய் !

என் இதயத்தை ஏன் வதைக்கிறாய் ?

20