இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராபர்ட் பர்ன்ஸ்
காதல்
அழகான டூன் நதி தீரமே !
சூழ்ந்து செறிந்த சோலைகளே !
நானோ கவலை நிரம்பி யுள்ளேன்,
நீங்கள் அழகாய் மலர்கின்றீர்!
சின்னப் பறவைகளே! அழகாய்ப் பாடுகின்றீர்!
உங்களுக்கு எப்படி மனம் வந்ததோ ?
II
கிளையில் உட்கார்ந்து பாடும் எழில் பறவையே!
என் இதயத்தை ஏன் வதைக்கிறாய் ?
என் பொய்க் 'காதல்' மெய்யாய் இருந்ததே !
அந்தக் காலத்தின் ஆனந்தத்தை
இப்பொழுது நினைப்பூட்டுகிறாய் !
என் இதயத்தை ஏன் வதைக்கிறாய் ?
20