இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
III
எழுந்து இடத்தைச் சுத்தஞ் செய்யுங்கள் !
பெரிய பானையை அடுப்பில் வையுங்கள் !
நம் சிறு கேட்டுக்குப் பொத்தான் சட்டையும்,
ஜாக்குக்குப் பட்டுச் சொக்காயும் போடுங்கள்
அவர்கள் செருப்புக் கறுப்புக் கனியட்டும் !
அவர்கள் மேல்ஜோடு பனிபோல்,வெண்மை வீசட்டும் !
அனைத்தும் அவருக்கு ஆனந்தம் அளிக்கவே !
அவர் வெகுநாள் கழித்துவருகிறார் அல்லவா?
IV
எவ்வளவு மெய்யான நெஞ்சு !
எவ்வளவு மிருதுவான பேச்சு !
அவர் மூச்சுக்கூடப் புதுக் காற்றுப் போலே.
அவர் படியேறி வரும்போது -
வெறும் பாதந்தானே - ஆனால்
எவ்வளவு இனிய இசை ! -
அவர் முகத்தைத் திரும்பவும் காண்பேனா ?
அவர் பேசுவதை மீண்டும் கேட்பேனா?
அவரை வரவேற்கப் போகிறேன் -
அந்த நினைவில் என் தலை சுழல்கிறதே !
V
கோலின் ஆனந்தமாய் இருந்தால் போதும்,
எனக்கு வேறோன்றும் தேவையில்லை !
28