பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







லே ஹண்ட்

ஜென்னி முத்தம் தந்தாள்

என்னைக் கண்டவுடன்

ஜென்னி ஓடி வந்தாள்,

எனக்கு முத்தம் தந்தாள்.

காலமே ! ஏ திருடா !

இன்ப விஷயங்கள் எல்லாம்

சேகரிப்பதில் ஆசையுண்டே,

இதையும் சேர்த்துக்கொள்.

சோர்ந்தான் என்று சொல்லு,

துயருற்றான் என்று சொல்லு,

சுகம் இழந்தான் என்று சொல்லு,

செல்வம் சேரவில்லை என்று சொல்லு,

வயோதிகம் வளர்கிறது என்று சொல்லு,-

ஆனால், -

ஜென்னி முத்தம் தந்தாள்

என்பதை மட்டும் மறந்திடாதே !


30