பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நண்பர் கூடும் கரை

தூக்கத்தின் கடலுக்கு அப்பால்

தொலையில் ஒரு கரையில்

பிரிந்த நண்பர் மீண்டும் கூடுவதாக

ஒரு பழைய நம்பிக்கை உண்டு.

பொய்யோ மெய்யோ,

அதை நான் கைவிடேன்!

அந்த நம்பிக்கையை இழவேன்!

அங்ஙனம் விழிப்பதற் கின்றேல்

ஊழிகால உறக்கமா யொழியட்டும்


34