பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

V

இந்த மூன்று பாடகர்களையும் கேட்ட மக்கள்
இவர்களில் யார் பெரியர் என்று வாதமிட்டனர்.
அவர்கள் இசை ஒவ்வோர் இதயத்திலும்
முரணான எதிரொலி எழுப்புவதாய்த் தோன்றின.

VI

'அளவில் உயர்வு தாழ்வுண்டு,
ஆனால் இனத்தில் அவை உண்டோ?
ஒவ்வொருவர்க்கும் வெவ்வேறு சக்தி அளித்தேன்.
ஒருவர் மனத்தை மகிழ்விக்கிறார்,
ஒருவர் தைரியம் ஊட்டுகிறார்,
ஒருவர் நல்வழி காட்டுகிறார்.
இதய யாழில் இவை மூன்றும்
சக்தி வாய்ந்த தந்திகள்.
மூன்றின் நாதமும் கேட்கப் பழகினோர்
முரண்பாடு ஒன்றும் அறியார்,
பரிபூரண ஒற்றுமை தெளிவார்' -
என்று இறைவன் இயம்பினான்.

லாங்பேலோ


38