இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புகழ்
‘புகழ்’ மங்கை, அடிபணிந்து காதல் இரப்பார்க்கு
- முகம் கோணுவாள்.
அலட்சியமா யிருக்கும் இளைஞனிடம் அவளாகவே
- தன்னை ஒப்புவிப்பாள்.
அவளை எண்ணாதவரிடம் அணுகி அவளாகக்
- காதல் வேண்டி நிற்பாள்.
அவளின்றித் திருப்தியுற அறியாதாரிடம்
- அவள் பேசமாட்டாள்.
தன்னைப் பற்றிப் பேசுவோர் தன்னை நிந்திப்பதாக
- எண்ணுவாள்.
அவளிடம் காதல்நோய் கொண்ட கவிஞர்காள்!
- அவள் எள்ளினால் நீங்களும் எள்ளிவிடுங்கள் !
அவளிடம் காதல்-பித்துக்கொண்ட கலைஞர்காள் !
- அவளிடம் தலைவணங்கி விடைபெற்றுக்
- கொள்ளுங்கள்
- அவளிடம் தலைவணங்கி விடைபெற்றுக்
அவள் இஷ்டப்பட்டால், அவள் தானாக
- உங்களைப் பின்தொடர்வாள்!
—————