பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் நான் அவர்களை லட்சியம்
செய்யப் போவதில்லை.
நான் உன் மகன் - அப்படியே நடப்பேன் !
ஆண்டவன் அருள் செய்வான்.

V


எங்கள் செல்வம், எங்கள் புகழ்,
எங்கள் அன்பு - இவற்றை
நீ விரும்புகிறா யில்லை ;
எங்களையே நீ உன் உயிர்க்குயிராய்
மதித்திருக்கின்றாய்.

VI


ஊழியத்தில் நான் இன்னல் அடைவதை,
நான் உயிர் துறப்பதை நீ காண்பாய்.
உயிரை உனக்குப் பலியிடுவதால்
ஊழுழி காலம் ஊழியம் செய்வேன் !


நாராயண வாமன திலகர்


50