பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IV

செம்மை விளங்கும் உன் மேனியில் தங்கி
வெண்மையாய் இருந்தும் செந்நிறம் பெற்ற
உன்னை நனைத்திடும் பனித் துளி -
இன்று விழுந்தால் - உன்னைத் தொடவே இருண்டு போகும்

V


வேனில் பொறாது உன் துாய இதழில்
தன் மென்கால் நீட்டி அமரும் ஈ
இன்று அமர்ந்தால் - வெறுத்து உன்னை விட்டு அகலும்.

VI


உயிரற்றது என்று மயங்குமாறு
உன் தேன் மாந்திய மகிழ்வால்
உன் மேனியில் அயரும் தேனீ -
இன்று வந்தால் - கண்ணெடுத்துப் பாராது.

VII


இதயமோ, - அது தன்னந் தனியாக
உன்னை மறவாமல் இருக்கும்.
உன்னை மறைக்கும் உன் மாறுதலை அறியினும்,
இதயம் இன்னும் உன் நறுமணம் நுகரும்,
உன் அழகைக் காணும்,
நீயே பூரணம் என்று துணியும்.

- பிரெளணிங் தேவி

53