பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பைரன் பிரபு

என் தோணி கரையிலே

I


என் தோணி கரையிலே,
என் கப்பல் கடலிலே !
போகுமுன், என் நண்பா !
உனக்கு இருமுறை வாழ்த்து !

II


என்னை நேசிப்பார்க்குப் பெருமூச்சு ;
என்னை வெறுப்பார்க்குப் புன் முறுவல் ;
என்ன வந்தாலும் சரியே,
எதையும் தாங்க இந்த இதயம் உண்டு !

III


என்னைச் சுற்றிக் கடல் குமுறினும்
என்னைத் தாங்கியே செல்லும் ;
பாலைவனம் என்னைச் சூழ்ந்தாலும்
அங்கேயும் தண் சுனைகள் உண்டு !


54