பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரெளணிங் தேவி

குழந்தைகளின் அழுகுரல்

ஆண்டுகள் வளர்ந்த பின்பே துக்கம் வரும்,
ஆயினும் குழந்தைகள் அழுகின்றனரே !
அன்னையர் மேல் தலைகளைச் சாய்த்துளர்,
ஆயினும் கண்ணீர் பொங்குகின்றதே!
ஆட்டுக் குட்டிகள் பசும்புல் மேய்கின்றன,
குருவிக் குஞ்சுகள் கூட்டில் கொஞ்சுகின்றன,
மான் குட்டிகள் நிழலோடு ஆடுகின்றன,
நாள் - மலர்கள் நறுமணம் வீசுகின்றன,
ஆனால், ஐயோ! இளங் குழந்தைகள்
மனங் கசந்து அழுகின்றனரே !
சுதந்திரம் வாழும் இந்த நாட்டிலே,
பிறர் விளையாட, இவர் அழுகின்றனரே !

}}

58