பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சகோதரரே! உங்கள் கூற்றை எல்லாம்

குழந்தைகள் அழுது பொய்யாக்குவதைக் கேட்பீர்!

மனிதர் அன்பே கடவுள் உண்மையைக் காட்டும்-

ஆனால், இரண்டையும் குழந்தைகள் நம்புவதில்லையே!

IX

வெளுத்த முகங்கள், ஒட்டிய கன்னங்கள் -

பயங்கரம் நிறைந்த கண்கள் -

தேவ கணங்கள் நினைவு வருகின்றன அல்லவோ!

"குழந்தைகள் கூறுவதைக் கேட்பீர்:

கொடுமை நிறைந்த நாடே! குழந்தைகளின் நெஞ்சில்

உலகத்தை ஏற்றி வைக்கிறாயே!

இதயத்தின் துடிப்பை மிதித்து அடக்குகிறாயே!

சந்தை மூலம் சாம்ராஜ்யம் ஆளுகின்றாயே!

கொடுங் கோலர்களே! உங்கள் வழி எல்லாம் எங்கள் இரத்தம்!

ஆனால் ஆற்றல் மிகுந்தார் சீற்றத்தினும்

குழத்தைகள் சாபம் கொடியதே, அறிவீர்!

65