இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சகோதரரே! உங்கள் கூற்றை எல்லாம்
- குழந்தைகள் அழுது பொய்யாக்குவதைக் கேட்பீர்!
மனிதர் அன்பே கடவுள் உண்மையைக் காட்டும்-
- ஆனால், இரண்டையும் குழந்தைகள் நம்புவதில்லையே!
IX
வெளுத்த முகங்கள், ஒட்டிய கன்னங்கள் -
- பயங்கரம் நிறைந்த கண்கள் -
தேவ கணங்கள் நினைவு வருகின்றன அல்லவோ!
- "குழந்தைகள் கூறுவதைக் கேட்பீர்:
கொடுமை நிறைந்த நாடே! குழந்தைகளின் நெஞ்சில்
- உலகத்தை ஏற்றி வைக்கிறாயே!
இதயத்தின் துடிப்பை மிதித்து அடக்குகிறாயே!
- சந்தை மூலம் சாம்ராஜ்யம் ஆளுகின்றாயே!
கொடுங் கோலர்களே! உங்கள் வழி எல்லாம் எங்கள் இரத்தம்!
- ஆனால் ஆற்றல் மிகுந்தார் சீற்றத்தினும்
குழத்தைகள் சாபம் கொடியதே, அறிவீர்!
65