பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறந்தோர் நகை


I


சாவு என்று பயப்படுத்துகிறீர்களா?
அதைக் கேட்டுச் சிரிப்பதா, வியப்பதா?
சாவா? நாங்கள் ஒருபொழுதும் ஜீவித்த தில்லையே!

II


விலங்கும் சிறையும் என்று பயப்படுத்துகிறீர்களா?
அதைக் கேட்க வினோதமா யிருக்கிறதே!
எங்கள் நரம்பு ஒவ்வொன்றும் விலங்குதானே!
எங்கள் உடல் முழுவதும் துன்பம் நிறைந்த சிறைதானே!

80