பக்கம்:ஆஞ்சநேய புராணம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நூலைப் பற்றி

பேராசிரியர் அ. திருமலைமுத்து சுவாமி அவர்கள் சோளிங்கபுரத்தில் கடிகையில் வீற்றிருக்கும் ஆஞ்சநேய சுவாமியைப் பற்றி உள்ளம் உருகப் பாடிய “ஆஞ்சநேய புராணம்" என்னும் இச் சிறு நூலை, 'அய்யாவின்’ அடியவர்கள் படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக தான் தொகுத்து வெளியிடுகின்றேன்.

ஆற்றல் மிகு ஆஞ்சநேய சுவாமிகளைப் பற்றிய இப்பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுகின்றவர்கள் தாயே அனைய கருணை உடைய ஆஞ்சநேய சுவாமிகளின் அருளைப் பெறுவார்கள். அத்துடன் அவர்கள் பேரின்பப் பெருவாழ்வு எய்துவார்கள். அன்பர்களது வேண்டுகோளுக்கிணங்க இந்நூலின் இரண்டாவது பதிப்பினை நாங்கள் மகிழ்ச்சியுடன் வெளியிடுகின்றோம்.

மதுரை

12.7.78

பகவதிதிருமலைமுத்துசுவாமி